தொடி அணி முன்கைத்
|
|
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
|
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
|
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
|
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
|
5
|
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
|
|
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
|
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
|
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
|
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
|
10
|
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
|
|
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
|
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
|
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
|
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
குடவாயிற்கீரத்தனார்
|
|
மேல் |