தொடி தோள் இவர்க
|
|
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
|
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
|
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
|
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
|
5
|
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
|
|
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
|
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
|
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
|
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
|
10
|
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
|
|
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
|
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
|
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம்
இறந்தோர்,
|
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
|
15
|
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
|
|
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
|
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
|
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
|
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
|
20
|
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
|
|
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
|
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
|
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
|
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
|
25
|
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
மேல் |