தொல் நலம் சிதையச்
|
|
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
|
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
|
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
|
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
|
5
|
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
|
|
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார்,
காண்பின்
|
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
|
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
|
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
|
10
|
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
|
|
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
|
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
|
|
வல்லே வருவர்போலும் வெண் வேல்
|
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
|
15
|
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
|
|
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
|
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
|
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
|
|
அணங்குடை வன முலைத் தாஅய நின்
|
20
|
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர்
இளம் பொன்சாத்தன் கொற்றனார்
|
|
மேல் |