தோட் பதன் அமைத்த
|
|
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
|
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
|
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
|
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
|
5
|
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
|
|
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
|
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
|
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
|
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
|
10
|
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
|
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
|
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
|
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
|
15
|
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
|
|
கல் பிறங்கு அத்தம் போகி,
|
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
மேல் |