தோள் புலம்பு அகலத் துஞ்சி
|
|
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
|
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
|
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
|
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
|
5
|
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
|
|
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
|
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
|
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
|
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
|
10
|
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
|
|
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
|
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
|
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
|
15
|
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
|
|
வேனில் வெற்பின் கானம் காய,
|
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
|
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
|
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
|
20
|
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
|
|
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
|
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
|
|
வைகு கடல் அம்பியின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தலைமகட்குத் தோழி
சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
|
|
மேல் |