தோளும் தொல் கவின் தொலைந்தன
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
மேல் |