தோளும் தொல் கவின் தொலைய
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
|
|
சால் பெருந் தானைச் சேரலாதன்
|
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
|
5
|
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
|
|
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
|
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
|
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
|
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
|
10
|
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
|
|
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
|
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
|
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
|
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
|
15
|
கெடு மகப் பெண்டிரின் தேரும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |