நகை நன்று அம்ம தானே அவனொடு
|
|
நகை நன்று அம்ம தானே 'அவனொடு,
|
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
|
|
கானல் அல்கிய நம் களவு அகல,
|
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
|
5
|
நூல் அமை பிறப்பின், நீல உத்தி,
|
|
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
|
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
|
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந்
தினைக்
|
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
|
10
|
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ,
|
|
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
|
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
|
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
|
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
|
15
|
பால் கண்டன்ன ஊதை வெண் மணல்,
|
|
கால் கண்டன்ன வழி படப் போகி,
|
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
|
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
|
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
|
20
|
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு,
|
|
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
|
|
விளையா இளங் கள் நாற, பலவுடன்
|
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
|
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
|
25
|
பாடு எழுந்து இரங்கு முந்நீர்,
|
|
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!
|
தலைமகன் வரைந்து எய்திய
பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது.
-உலோச்சனார்
|
|
மேல் |