நகை நனி உடைத்தால்
|
|
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
|
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
|
|
வீ ததை கானல் வண்டல் அயர,
|
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
|
5
|
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
|
|
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
|
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
|
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
|
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
|
10
|
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
|
|
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
|
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
|
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
|
|
பொன் நேர் நுண் தாது நோக்கி,
|
15
|
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
|
இரந்து பின்னின்ற
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க்
கண்ணம்பாளனார்
|
|
மேல் |