நகை நீ கேளாய் தோழி
|
|
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
|
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
|
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
|
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
|
5
|
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
|
|
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
|
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
|
|
மடை செலல் முன்பின் தன் படை செலச்
செல்லாது,
|
|
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்'
என,
|
10
|
எய்யாது பெயரும் குன்ற நாடன்
|
|
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி
அவிழ்ந்து,
|
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
|
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து
துயல்வர,
|
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
|
15
|
வல்லே என் முகம் நோக்கி,
|
|
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப,
தோழி சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |