நகை ஆகின்றே தோழி
|
|
நகை ஆகின்றே தோழி! நெருநல்
|
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
|
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
5
|
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
|
|
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
|
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
|
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
|
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
|
10
|
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
|
|
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்
இட்டு,
|
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
|
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
|
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
|
15
|
என்னும் தன்னும் நோக்கி,
|
|
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
|
பரத்தை மனைக்குச்
செல்கின்ற பாணன் தன் மனைக்கு
வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
மேல் |