நட்டோர் இன்மையும்
|
|
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
|
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
|
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
|
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
|
5
|
மென் முலை முற்றம் கடவாதோர்' என,
|
|
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
|
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
|
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
|
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
|
|
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
|
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
|
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
|
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
|
15
|
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
|
|
கையறு நெஞ்சினள், அடைதரும்
|
|
மை ஈர் ஓதி மாஅயோளே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன்
செங்கண்ணனார்
|
|
மேல் |