நம் நயந்து உறைவி
|
|
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
|
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
|
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள்
புரிந்து,
|
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
|
5
|
நினையினைஆயின், எனவ கேண்மதி!
|
|
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
|
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
|
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
|
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
|
10
|
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
|
|
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
|
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
|
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள்
சேர்பு,
|
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
|
15
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
|
|
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
|
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
|
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
|
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
|
20
|
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
|
|
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
|
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
|
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு
நின்று,
|
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
|
25
|
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
|
|
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
|
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
|
முன் ஒரு காலத்துப் பொருள்
முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. -
பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |