நரை விராவுற்ற நறு மென்
|
|
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
|
|
செம் முது செவிலியர் பல பாராட்ட,
|
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
|
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
|
5
|
மனை உறை புறவின் செங் காற் சேவல்
|
|
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
|
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
|
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
|
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
|
10
|
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
|
|
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
|
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
|
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
|
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
|
15
|
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
|
|
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
|
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
|
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
|
|
தார் மணி மா அறிவுறாஅ,
|
20
|
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
|
வினை முற்றி வந்து எய்திய
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
மேல் |