நல் நுதல் பசப்பவும் ஆள்வினை
|
|
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
|
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
|
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
|
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
|
5
|
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
|
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
|
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
|
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
|
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
|
10
|
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
|
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
|
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
|
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
|
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
|
15
|
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
|
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
|
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
|
|
திருந்துஇலை எஃகம் போல,
|
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
|
தலைமகன் பிரியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.-
மருதன் இள நாகனார்
|
|
மேல் |