நல் நுதல் பசப்பவும் பெருந் தோள்
|
|
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள்
நெகிழவும்,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
|
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
|
5
|
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
|
|
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
|
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
|
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
|
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
|
10
|
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
|
|
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
|
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
|
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
|
|
வருதும், யாம்' எனத் தேற்றிய
|
15
|
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
|
தலைமகன் பிரிய, வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர்
கிழார் மகனார் கண்ணனார்
|
|
மேல் |