நல் நெடுங் கதுப்பொடு
|
|
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
|
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
|
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
|
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
|
5
|
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
|
|
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
|
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
|
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
|
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
|
10
|
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,
|
|
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
|
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
|
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
|
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
|
15
|
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,
|
|
இனிய ஆகுக தணிந்தே
|
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
|
உடன்போக்கு வலித்த தோழி
தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகனார்
|
|
மேல் |