நல் மரம் குழீஇய
|
|
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
|
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
|
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
|
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
|
5
|
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை,
|
|
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
|
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
|
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
|
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
|
10
|
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
|
|
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
|
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
|
|
புதுவது வந்த காவிரிக்
|
15
|
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?
|
பரத்தையொடு புனலாடிய
தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான்
ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட
பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப,
சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்
|
|
மேல் |