நறவு உண் மண்டை
|
|
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
|
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
|
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
|
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
|
5
|
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
|
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
|
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
|
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
|
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
|
10
|
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
|
|
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
|
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
|
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
|
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
|
15
|
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
|
|
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
|
|
களிறு கவர் கம்பலை போல,
|
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
|
தோழி வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
|
மேல் |