நன் கலம் களிற்றொடு
|
|
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
|
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர்,
வழிமொழிந்து
|
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
|
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
|
5
|
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
|
|
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
|
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
|
|
பாசறை வருத்தம் வீட, நீயும்
|
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
|
10
|
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
|
|
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
|
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
|
|
காலை எய்த, கடவுமதி மாலை
|
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
|
15
|
அரமிய வியலகத்து இயம்பும்
|
|
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்கு
உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
மேல் |