நன்று அல் காலையும்
|
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
|
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல்
சூழ்ச்சியின்,
|
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
|
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
|
5
|
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
|
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
|
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
|
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
|
|
நல்காது துறந்த காதலர், 'என்றும்
|
10
|
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
|
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
|
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
|
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
|
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
|
15
|
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
|
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
|
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
|
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
|
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
|
20
|
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
|
|
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
|
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
|
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
|
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
|
25
|
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
|
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
|
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
மேல் |