நனை விளை நறவின் தேறல்
|
|
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
|
|
திதலை அல்குல் வரியும் வாடின;
|
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண்
|
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
|
5
|
இனையல் வாழி, தோழி! நனை கவுள்
|
|
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
|
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
|
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
|
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
|
10
|
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,
|
|
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
|
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
|
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
|
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
|
15
|
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,
|
|
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
|
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
|
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
|
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
|
20
|
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,
|
|
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
|
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது;
பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
|
|
மேல் |