நாண் கொள் நுண் கோலின்
|
|
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்
மகள்
|
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
|
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
|
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
|
5
|
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
|
|
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
|
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
|
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
|
|
கழனி உழவர் குற்ற குவளையும்,
|
10
|
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
|
|
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
|
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
|
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
|
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
|
15
|
பெருங் களிற்று எவ்வம் போல,
|
|
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப்
பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
|
|
மேல் |