நாம் நகை உடையம்
|
|
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
|
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
|
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
|
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
|
5
|
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
|
|
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
|
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
|
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
|
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
|
10
|
தான் வரும் என்ப, தட மென் தோளி
|
|
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
|
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
|
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
|
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
|
15
|
கரு முக முசுவின் கானத்தானே.
|
தோழியால் தலைமகளை
உடன்வரும் எனக் கேட்ட தலைமகன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகன்
|
|
மேல் |