நாயுடை முது நீர்க்
|
|
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
|
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
|
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
|
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
|
5
|
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
|
|
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
|
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
|
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
|
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
|
10
|
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
|
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச்
செல்லேன்,
|
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
|
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
|
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ
|
15
|
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
|
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
|
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
|
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
|
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?
|
பரத்தையர் சேரியினின்றும்
வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்'
என்றாற்குத் தலைமகள் சொல்லியது. -
சாகலாசனார்
|
|
மேல் |