நாள் வலை முகந்த
|
|
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
|
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
|
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
|
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
|
5
|
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
|
|
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
|
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
|
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'
எனச்
|
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
|
10
|
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,
|
|
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
|
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
|
|
சேணின் வருநர் போலப் பேணா,
|
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
|
15
|
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,
|
|
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
|
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
|
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
|
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
|
20
|
இளையரும் புரவியும் இன்புற, நீயும்
|
|
இல் உறை நல் விருந்து அயர்தல்
|
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
|
பகற்குறி வந்து நீங்கும்
தலைமகற்குத் தோழி சொல்லியது. -
உலோச்சனார் மணி மிடை பவளம்
முற்றும்நித்திலக் கோவை
|
|
மேல் |