நிதியம் துஞ்சும் நிவந்து
|
|
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
|
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
|
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
|
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
|
5
|
காமர் பீலி ஆய் மயில் தோகை
|
|
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
|
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
|
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
|
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
|
10
|
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்
|
|
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
|
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
|
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
|
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
|
15
|
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,
|
|
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
|
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
|
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
|
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
|
20
|
அள் இலைப் பலவின் கனி கவர் கைய
|
|
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
|
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங்
குன்றத்து,
|
|
பாடு இன் அருவி சூடி,
|
|
வான் தோய் சிமையம் தோன்றலானே.
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
-காவட்டனார்
|
|
மேல் |