நிலம் நீர் அற்று
|
|
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
|
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
|
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
|
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
|
5
|
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
|
|
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
|
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
|
|
கல்லுடை அதர கானம் நீந்தி,
|
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
|
10
|
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
|
|
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
|
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
|
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
|
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
|
15
|
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
|
|
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
|
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
|
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
|
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
|
20
|
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
|
|
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
|
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |