நிலாவின் இலங்கு மணல்
|
|
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
|
|
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
|
|
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
|
|
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
|
5
|
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,
|
|
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
|
|
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
|
|
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
|
|
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
|
10
|
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,
|
|
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
|
|
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
|
|
எம் வரை அளவையின் பெட்குவம்;
|
|
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.
|
தலைமகள் குறிப்பு அறிந்த
தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது.
-உலோச்சனார்
|
|
மேல் |