நிழல் அறு நனந்தலை
|
|
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
|
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
|
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
|
|
காமர் சேவல் ஏமம் சேப்ப;
|
5
|
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது
|
|
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
|
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
|
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
|
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா
உயிர்க்கும்
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்
|
|
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
|
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
|
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
|
|
தானே சென்ற நலனும்
|
15
|
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?
|
தலைமகன் பிரிவின்கண்,
தலைமகள் தோழிக்குச் சொற்றது.-
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
|
மேல் |