நின் வாய் செத்து
|
|
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
|
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
|
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
|
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
|
5
|
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
|
|
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
|
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
|
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
|
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
|
10
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
|
|
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
|
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
|
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
|
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
|
15
|
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
|
|
திதியனொடு பொருத அன்னி போல
|
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
|
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
|
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
|
20
|
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
|
|
மின் நேர் மருங்குல், குறுமகள்
|
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம்
ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
நக்கீரர்
|
|
மேல் |