நீ செலவு அயரக்
|
|
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
|
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
|
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
|
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு
தின்று
|
5
|
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
|
|
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
|
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
|
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
|
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
|
10
|
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
|
|
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
|
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
|
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
|
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
|
15
|
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
|
|
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
|
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
|
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
|
|
மாலை இன் துணைஆகி, காலைப்
|
20
|
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
|
|
மண மனை கமழும் கானம்
|
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
|
தோழி தலைமகள் குறிப்பு
அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.-
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
|
|
மேல் |