நீர் நிறம் கரப்ப
|
|
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
|
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
|
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
|
|
மராஅ யானை மதம் தப ஒற்றி,
|
5
|
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
|
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
|
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
|
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
|
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
|
10
|
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
|
|
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
|
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
|
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
|
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
|
15
|
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம்
பொதும்பில்,
|
|
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
|
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
|
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.
|
தோழி இரவு வருவானைப் பகல்
வா என்றது. - கபிலர்
|
|
மேல் |