நீலத்து அன்ன நீர்
|
|
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
|
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
|
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
|
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
|
5
|
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்
|
|
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
|
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
|
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
|
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
|
10
|
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்
|
|
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப்
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
|
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
|
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என,
|
15
|
கடவுட் கற்பின் மடவோள் கூற,
|
|
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
|
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
|
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
|
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
|
20
|
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்
|
|
இன் நகை இளையோள் கவவ,
|
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!
|
வினை முற்றிப் புகுந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
|
|
மேல் |