நுதலும் நுண் பசப்பு இவரும்
|
|
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
|
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
|
|
பணை எழில் அழிய வாடும்; நாளும்
|
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது
|
5
|
இனையல் வாழி, தோழி! புணர்வர்
|
|
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள்
புரிந்து
|
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
|
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
|
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
|
10
|
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
|
|
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
|
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
|
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
|
|
கருங் கோட்டு இருப்பை ஊரும்
|
15
|
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
-கல்லாடனார்
|
|
மேல் |