நெஞ்சு உடம்படுதலின்
|
|
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
|
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
|
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து,
|
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
|
5
|
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,
|
|
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
|
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
|
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
|
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
|
10
|
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்
|
|
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
|
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
|
|
அடு புகழ் எஃகம் போல,
|
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!
|
தலைமகன் சிறைப்புறமாகத்
தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம்
ஆம். -மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |