நெஞ்சு நெகிழ்தகுந கூறி
|
|
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
|
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
|
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
|
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
|
5
|
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,
|
|
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
|
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
|
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
|
|
மை பட்டன்ன மா முக முசுவினம்
|
10
|
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென
|
|
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
|
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
|
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
|
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
|
15
|
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு
வினை
|
|
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
|
|
தோளே தோழி! தவறு உடையவ்வே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத்
தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
மேல் |