நெடுங் கயிறு வலந்த
|
|
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
|
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
|
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
|
5
|
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
|
|
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
|
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
|
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
|
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
|
10
|
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
|
|
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
|
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
|
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
|
|
தண் நறுங் கானல் வந்து, 'நும்
|
15
|
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?
|
பகற்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த
நெடுஞ்சேரலாதன்
|
|
மேல் |