நெடுங் கரைக் கான்யாற்றுக்
|
|
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல்
சாஅய்,
|
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
|
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும்,
காஞ்சிப்
|
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
|
5
|
வதுவை நாற்றம் புதுவது கஞல,
|
|
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
|
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
|
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
|
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
|
10
|
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
|
|
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
|
|
இகழுநர் இகழா இள நாள் அமையம்
|
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
|
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
|
15
|
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
|
|
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
|
|
மெல்லிய இனிய கூறி, வல்லே
|
|
வருவர் வாழி தோழி! பொருநர்
|
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
|
20
|
பொதியிற் செல்வன், பொலந்தேர்த்
திதியன்,
|
|
இன் இசை இயத்தின் கறங்கும்
|
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
|
பருவங் கண்டு அழிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர்
தந்த பூதப் பாண்டியன்
|
|
மேல் |