நெடுங் கொடி நுடங்கும்
|
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
|
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
|
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
|
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
|
5
|
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
|
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
|
|
விடியல் வைகறை இடூஉம் ஊர!
|
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
|
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
|
10
|
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்
போகிய,
|
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
|
|
அன்னிமிஞிலியின் இயலும்
|
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
|
|
மேல் |