நெடு மலை அடுக்கம்
|
|
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
|
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
|
5
|
வாரல் வாழியர், ஐய! நேர் இறை
|
|
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
|
|
காவல் கண்ணினம் தினையே; நாளை
|
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
|
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
|
10
|
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,
|
|
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
|
|
திருமணி விளக்கின் பெறுகுவை
|
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
|
இரவுக்குறிச் சென்று
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை,
பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி
வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர்
நற்றாமனார்
|
|
மேல் |