நெடு வேள் மார்பின்
|
|
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
|
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
|
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
|
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
|
5
|
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
|
|
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
|
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
|
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
|
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
|
10
|
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
|
|
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
|
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
|
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
|
15
|
அன்றில் அகவும் ஆங்கண்,
|
|
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
|
தோழி, பகற்குறிக்கண்
தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. -
நக்கீரனார்
|
|
மேல் |