நோகோ யானே நோதகும்
|
|
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
|
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
|
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
|
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
|
5
|
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
|
|
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
|
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
|
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
|
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
|
10
|
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
|
|
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
|
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
|
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
|
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
|
15
|
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
|
|
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க்
கோங்கின்
|
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
|
|
கை விடு சுடரின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொற்றது. - சேரமான்
இளங்குட்டுவன்
|
|
மேல் |