நோற்றோர்மன்ற தாமே
|
|
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
|
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்'
எனத்
|
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
|
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய்
உழந்து
|
5
|
ஆழல் வாழி, தோழி! தாழாது,
|
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
|
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
|
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
|
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
|
10
|
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
|
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
|
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
|
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
|
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
|
15
|
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
|
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
|
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
|
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |