பகலினும் அகலாதாகி
|
|
பகலினும் அகலாதாகி, யாமம்
|
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
|
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
|
|
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
|
5
|
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,
|
|
பருகுவன்ன காதலொடு திருகி,
|
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
|
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
|
|
அருளிலாளர் பொருள்வயின் அகல,
|
10
|
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
|
|
யான் எவன் உளெனோ தோழி! தானே
|
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
|
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
|
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
|
15
|
கனை எரி பிறப்ப ஊதும்
|
|
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?
|
பிரிவு உணர்த்தப்பட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன்
பேரிசாத்தனார்
|
|
மேல் |