பசித்த யானைப் பழங்கண்
|
|
பசித்த யானைப் பழங்கண் அன்ன
|
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
|
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
|
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
|
5
|
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
|
|
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன்
சுரைப்
|
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
|
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
|
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
|
10
|
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
|
|
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
|
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
|
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
|
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
|
15
|
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி,
|
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |