பசும் பழப் பலவின்
|
|
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
|
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
|
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
|
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
|
5
|
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி,
|
|
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
|
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
|
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
|
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
|
10
|
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
|
|
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
|
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
|
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
|
|
தேர் ஊர் தெருவில் ததும்பும்
|
15
|
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |