பசை படு பச்சை
|
|
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
|
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
|
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
|
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
|
5
|
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
|
|
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
|
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
|
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
|
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
|
10
|
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
|
|
பாணன் வந்தனன், தூதே; நீயும்
|
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
|
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
|
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை.......மள்ளனார்
|
|
மேல் |