பயம் கெழு திருவின்
|
|
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
|
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு
விளங்கி,
|
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
|
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
|
5
|
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ்
சினைத்
|
|
தண் துளி அசைவளி தைவரும் நாட!
|
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண்
சாம்பாது,
|
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
|
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
|
10
|
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,
|
|
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
|
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
|
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
|
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
|
15
|
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை
|
|
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
|
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
|
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
|
20
|
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்
|
|
நீடலர் ஆகி வருவர், வல்லென;
|
|
கங்குல் உயவுத் துணை ஆகிய
|
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத்
தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன்
இளந்தேவனார்
|
|
மேல் |