பல் பூந் தண் பொழில்
|
|
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
|
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
|
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
|
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
|
5
|
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,
|
|
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
|
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
|
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
|
|
வந்த மாலை பெயரின், மற்று இவள்
|
10
|
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,
|
|
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
|
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
|
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
|
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
|
15
|
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!
|
|
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
|
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
|
|
நல் மலர் நறு வீ தாஅம்
|
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.
|
பகற்குறி வந்த தலைமகற்குத்
தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது.
- மதுரைக் கண்ணத்தனார்
|
|
மேல் |